பேஸ்புக் காதலியை சந்திக்க 10 நாட்களாக ஏர்போர்ட்டில் காத்திருந்த காதலன் !
பெய்ஜிங்: பேஸ்புக் காதலியை சந்திக்க விமான நிலையத்திலே 10 நாட்களாக காத்திருந்த காதலன் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெதர்லாந்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர் பீட்டர்(41), இவருக்கும் சீனாவைச் சேர்ந்த ஜாங்(26), என்ற பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் நட்பு காதலாக மலர்ந்துள்ளது. பின்னர் தன் காதலியை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளார் பீட்டர். உடனே இந்த தகவலை ஜாங்கிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து சீனாவிற்கு கிளம்பி வந்துள்ளார். ஆனால், அவரின் காதலி அவரை சந்திக்க விமான நிலையத்திற்கு வராத காரணத்தால் அவர் தொடர்ந்து விமான நிலையத்தில் தங்கி காதலி வரும் வரையில் காத்திருந்தார்.
பின்னர் அவரின் உடல் நிலை மோசமானதை அறிந்த விமான நிலைய ஊழியர்கள் பீட்டரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும் தனது காதலி விரைவில் தன்னை சந்திப்பார் என நம்பிக்கையுடன் இருக்கிறார் பீட்டர்.
இதுகுறித்து அவரின் காதலி அளித்துள்ள பேட்டியில், பீட்டர் சீனா வருவதாக தன்னிடம் தெரிவித்திருந்தார். விமான டிக்கெட்டையும் போட்டோ எடுத்து அனுப்பியிருந்தார். அதற்கு பின்னர் அவர் என்னை தொடர்பு கொள்ள வில்லை. அதனால் நான் அதை நம்பவில்லை. அறுவை சிகிச்சைக்காக தற்போது வேறொரு இடத்திற்கு சென்றிருப்பதாகவும், செல்போனை ஆப் செய்து வைத்திருந்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.