இங்கிலாந்து.. பிர்மின்ஹாம் பகுதியில் மக்கள் பலருக்கு கத்திகுத்து.. சரமாரி தாக்குதல்..போலீஸ் குவிப்பு
லண்டன்: இங்கிலாந்தின் பிர்மின்ஹாம் பகுதியில் பொது மக்கள் பலர் மோசமாக கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் இருக்கும் பிர்மின்ஹாம் பகுதி அங்கு அதிக மக்கள் நெருக்கடி கொண்ட இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இங்கு இன்று காலை பெரிய அளவில் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது .
பிர்மின்ஹாம் பகுதியில் உள்ள சிட்டி சென்டர் இடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அங்கு சாலையில் சென்ற பொது மக்கள் பலருக்கு மர்ம நபர்கள் கத்தி குத்து தாக்குதல் நடந்துள்ளது. இதனால் அங்கு நிலைமை மோசமானதாக இருக்க வாய்ப்புள்ளது என்று இங்கிலாந்து போலீஸ் தெரிவித்துள்ளது.
புயலை கிளப்பிய ஸ்போர்ட்ஸ் பிரா.. பெங்களூர் பார்க்கில் நடந்த சம்பவம்.. சர்ச்சையில் கவிதா ரெட்டி!
இந்த கத்தி குத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கத்தி குத்து காரணமாக பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால் எத்தனை பேர் இதில் தாக்கப்பட்டனர் என்று தெரியவில்லை.
தாக்குதல் குறித்து முழுமையாக விவரம் தெரியவில்லை. இப்போது எதையும் தெரிவிக்க முடியாது. விசாரணை நடத்தி வருகிறோம் என்று இங்கிலாந்து போலீஸ் தெரிவித்துள்ளது.