For Daily Alerts
Just In
ராஜபக்சே வருவதை விரும்பாத மொரீஷியஸ்.. 2015 காமன்வெல்த் மாநாட்டை நடத்த மறுப்பு!
போர்ட் லூயிஸ்: அடுத்த காமன்வெல்த் மாநாட்டை மொரீஷியஸ் நடத்தாது என அந்நாட்டு பிரதமர் ராம்கூலம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
வரும் 2015ம் ஆண்டு அடுத்த காமன்வெல்த் மாநாடு மொரீஷியளில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில், பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அந்நாட்டு பிரதமர் ராம் கூலம், ‘ திட்டமிட்டபடி மொரீஷியஸில் 2015ல் நடக்கவேண்டிய காமன்வெல்த் மாநாடு அங்கு நடைபெறாது. இலங்கையில் நடைபெறும் மாநாட்டை புறக்கணித்ததே இதற்கு காரணம்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த மாநாட்டை நடத்த விரும்பும் ஒரு நாட்டின் தலைவர் மாநாடு நடக்கும் நாட்டில் இருக்க வேண்டும் என்பது மரபு. அந்த மரபை மீற விரும்பாததால் வேறு யாராவது அடுத்த மாநாட்டை நடத்தட்டும் என எமது வெளியுறவு அமைச்சரிடம் தெரிவித்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
English summary
Mauritius will not host the next Commonwealth summit in 2015 as planned because of its boycott of this weekend's meeting in Sri Lanka, Prime Minister Navin Chandra Ramgoolam told British television.
Story first published: Sunday, November 17, 2013, 16:52 [IST]