துபாயில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாம்
துபாய்: துபாயில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாம் 14.08.2015 அன்று காலை 8.30 மணிக்கு துபாய் அல் கிஸஸ் பகுதியில் அமைந்துள்ள பில்வா இந்தியப் பள்ளியில் நடைபெற இருக்கிறது.
இந்த ரத்ததான முகாமை பில்வா இந்தியப் பள்ளி, நண்பர்கள் ரத்ததான குழு ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். முகாமினை இந்திய துணைத் தூதரக அதிகாரி டாக்டர் திஜு தாமஸ் துவங்கி வைக்கிறார். லத்திபா மருத்துவமனையின் ரத்ததான துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜைனப் ஹைதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
ரத்ததானம் அளிக்க விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களை முன்பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்ய விரும்புவோர் 050 1512757, 056 7464129, 056 9541949 ஆகிய எண்களில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
ரத்ததானம் அளிக்கும்போது தங்களைப் பற்றிய விபரம் கொண்ட எமிரேட்ஸ் அடையாள அட்டையினை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.