புகாரில் விடுபட்ட கமா காரணமாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு.. 5 மில்லியன் இழப்பீடு கொடுத்த நிறுவனம்!
அமெரிக்காவில் கமா காரணமாக ஒரு வழக்கு மோசமாக இழுத்தடிக்கப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்காவில் இருக்கும் மெயின் என்ற நகரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருக்கும் 'அஹ்ரஸ்ட்' என்ற நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில்தான் இந்த கமா பிரச்சனை வந்துள்ளது.
நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் ஒரு இடத்தில் கமா குறிப்பிடாமல் இருந்துள்ளனர். இதனால் நீதிபதிகள் வழக்கில் எதிராக தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.
ஆனால் கடைசி நேரத்தில் வழக்கில் நிறைய திருப்பங்கள் நடந்து மொத்தமாக வழக்கின் தீர்ப்பு மாறியுள்ளது.
வழக்கு
'அஹ்ரஸ்ட்' என்பது பெரிய பால் பொருள் விற்பனை நிறுவனம் ஆகும். இதில் வேலை பார்த்த பணியாளர்களுக்கு கூடுதல் நேரத்திற்கான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று இந்த வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு சரியாக 5 வருடங்களுக்கு முன்பு தொடுக்கப்பட்டது.
கமா இல்லை
ஆனால் இந்த வழக்கில் ஓட்டுனர்கள் பால் பொருட்களை ஏற்றுமதி செய்வதோடு அதை பேக்கிங்கும் செய்வதாக கூறப்பட்டு இருக்கிறது. கமா காரணமாக இப்படி பொருள் வந்துள்ளது. ஓட்டுனர்கள் பேக்கிங் செய்யவில்லை என்று கம்பெனி விளக்கம் கொடுத்தது.
மீண்டும்
தற்போது நீதிபதிகள் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள். பின் ஓட்டுனர்கள் மீண்டும் கமாவை சரி செய்ய குறிப்பிட்டு வழக்கு தொடுத்தார்கள். இதனால் இந்த வழக்கு கடந்த 5 வருடமாக நடந்து கொண்டு இருந்தது.
5 மில்லியன்
தற்போது இந்த வழக்கில் கடைசியாக ஓட்டுனர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. 5 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனால் ஒவ்வொரு ஓட்டுநர்களும் லட்சக்கணக்கில் ஒரே நாளில் சம்பாதித்து இருக்கிறார்கள்.