மாயமான விமானம் இந்தோனேசியா விண்வெளியை வேண்டும் என்றே தவிர்த்து சென்றதா?
பெர்த்: இந்திய பெருங்கடலில் விழுந்ததாக கூறப்படும் விமானம் மலேசியாவில் இருந்து கிளம்பிய பிறகு இந்தோனேசியா பக்கம் பறந்து செல்வதை தவிர்த்துள்ளது தெரிய வந்துள்ளது.
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கிளம்பி சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்றது. ஆனால் விமானம் சீனா செல்லும் வழியில் மாயமானது. இதையடுத்து விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. விமானத்தை தேடும் பணியில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் விமானம் குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது.
இந்தோனேசியா
விமானம் மலேசியாவில் இருந்து கிளம்பி இந்தோனேசியா பக்கம் செல்லாமல் சுற்றி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
ரேடார்
மலேசிய விமானம் தங்கள் நாட்டு ராணுவ ரேடாரில் வரவே இல்லை என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம்
விமானம் ஒன்று வேண்டும் என்றே ஒன்று இந்தோனேசியாவை தவிர்த்து பறந்திருக்கலாம் அல்லது எதேச்சையாக இந்தோனேசியாவின் ரேடார் பக்கம் வராமல் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிக்னல்கள்
விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சீன கப்பல் மற்றும் ஆஸ்திரேலிய கப்பல் இரண்டு இடங்களில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.