காணாமல் போன இளைஞர் - மலைப்பாம்பின் வயிற்றில் சடலமாக மீட்பு.. இந்தோனேஷிய பயங்கரம் - வீடியோ
இந்தோனேஷியாவில் மாயமான இளைஞர் ஒருவர் மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுலவேசி: இந்தோனேஷியாவில் மாயமான இளைஞர் ஒருவர் மாலைப்பாம்பின் வயிற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பாம்பின் வயிற்றை கிழித்து இளைஞரின் சடலம் மீட்க்கப்படும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
இந்தோனேஷிய நாட்டின் சுலவேசி தீவைச் சேர்ந்த 25 வயது வாலிபர் அக்பர் சலுபிரோ தனது தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். பணிக்குச் சென்ற அக்பர் வீட்டிற்கு திரும்பாததால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரைத் தேடி அலைந்துள்ளனர்.
இந்நிலையில், அக்பரின் வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில், பெரிய மலைப் பாம்பு ஒன்று வயிறு வீங்கிய நிலையில் காணப்பட்டது. சந்தேகமடைந்த உறவினர்கள் 7 மீட்டர் நீளமுள்ள அந்த பாம்பின் வயிற்றை கிழித்தபோது, அதில் காணாமல் போன அக்பர் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வீடியோ
அக்பர் தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவரை மலைப்பாம்பு விழுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அக்பரின் உடலை மலைபாம்பின் வயிற்றில் இருந்து எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.