இஞ்சி இடுப்பழகி... என்னவெல்லாம் செய்றாங்க பாருங்க இந்த லேடி...
வெனிசுலா: பெண்களின் இடையை வர்ணிக்காத கவிஞர்களே இருக்கமாட்டார்கள். கமல் சொன்ன ‘இஞ்சி இடுப்பழகி' தான் அனைவராலும் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. ஆனால் கொடி இடையாள், துடியிடையாள் என்றும் கவிஞர்கள் சங்ககாலத்திலேயே வர்ணித்துள்ளனர். அந்த உடுக்கை இடையை பெற வேண்டும் என்பதற்காக வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியான அலிரா அவெண்டாரோ கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக ஒரு நாளின் 23 மணி நேரம் அதற்கான விசேஷ உடையை பயன்படுத்தி, தனது முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார்.
மாடல் அழகியின் இடைதான் உடுக்கை போல இருக்கிறது என்றாலும், இவரது முன்னழகும், பின்னழகும் பிரம்மாண்டமாகவே இருக்கிறது.
ஒரு மணிநேரம் ரிலாக்ஸ்
தனது அழகான உடுக்கை இடைக்காக கச்சையோடு திரியும் இந்த மாடல் அழகி, குளிக்கும்போது மட்டும் இந்த கச்சையை சுமார் ஒரு மணி நேரத்துக்கு அகற்றி வைக்கிறார்.
டாக்டர் கண்காணிப்பு
தொடர்ந்து இதைப்போன்ற கச்சையை பயன்படுத்துவது, உயிருக்கே கூட ஆபத்தாக முடிந்துவிடும் என குறிப்பிடும் பிரபல டாக்டர், நல்லவேளையாக இவருக்கு இதுவரை ஒன்றும் நேரவில்லையே என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். அவ்வப்போது இந்த அழகியை கண்காணித்து அளவெடுக்கின்றனர்.
பார்த்தாலே பரவசம்
இந்த அழகியின் முயற்சியின் விளைவாக முன்னழகை பிரமாண்டப்படுத்தி இடையின் அளவை 20 அங்குலங்களாக குறைத்து, பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்துகின்றார். இந்த இடையழகியை பார்க்கும் பெண்கள் தங்களின் செல்போனில் புகைப்படம் எடுக்காமல் நகர்வதில்லை.
ஆண்களின் ஏக்கம்
டாக்டர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், தனது இடையை ஆட்டி நடந்து இவர் வீதிஉலா போகும் வேளையில் பொடிசுகள் முதல் பெரிசுகள் வரை ஆயிரக்கணக்கான ஆண்கள் ஏக்கப் பெருமூச்சும் விடுகின்றனர்.