அமெரிக்காவில் 11 மாத ஆண் குழந்தையை கொன்று சடலத்தின் போட்டோவை ஃபேஸ்புக்கில் போட்ட பேய்
நியூயார்க்: அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் தனது 11 மாத ஆண் குழந்தையை கொலை செய்து அந்த சடலத்தை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயீன்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் நிகோல் கெல்லி(22). அவருக்கு கியாம் பெலிக்ஸ் ஜூனியர் என்ற 11 மாத ஆண் குழந்தை இருந்தது.
கணவரை பிரிந்து வாழும் கெல்லி தனது குழந்தை மூச்சுவிடாதபடி பெட்ஷீட்டில் சுற்றி ஒன்றரை மணிநேரம் தனியாக விட்டுவிட்டுச் சென்றார். குழந்தை மூச்சுத்திணறி இறந்த பிறகு அவர் சடலத்தை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.
அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
உன் ஆன்மா சாந்தி அடையட்டும். என் குழந்தையை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். அவனை மறுபடியும் என் வாழ்வில் கொண்டு வர நினைக்கிறேன். அவன் இறந்துவிட்டதை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். அவனை ஒரு தாயாக நான் பாதுகாக்க வேண்டும். அவனின் ஆன்மா என்னைச் சுற்றித் தான் இருக்கும் என்று எனக்கு தெரியும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.