கேமராவை கொடுப்பா.. லெட் அஸ் டேக் ஏ செல்பி.. இதுக்குப் பேர்தான் குரங்குச் சேட்டையோ!
பாலி: இந்தோனேஷியாவில் குரங்குகள் காட்டில் ஒரு குடும்பத்தினர் செல்பி எடுத்தபோது அங்கு வந்த குரங்கு அந்த கேமராவுக்கு போஸ் கொடுத்து செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் சிரிப்பை வரவழைக்கிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஜூடி ஹிக்ஸ். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்காக இந்தோனேஷியாவில் உள்ள பாலிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
அதன்படி கணவர் சைமன், மூன்று குழந்தைகள் எலிஜா, ஜிம்மி, கேலீக் ஆகியோருடன் உபுத் குரங்குகள் காட்டுக்கு சென்றனர். அங்கு பெரும்பாலான நேரம் காட்டிலேயே இருந்ததால் ஹிக்ஸ் அவ்வப்போது போட்டோக்களை எடுத்துக் கொண்டிருந்தார்.
சுற்றுலா
இந்த நிலையில் 5 பேரும் சேர்ந்து போட்டோ எடுக்க விரும்பினர். உடனே இவர்கள் சுற்றுலா வழிகாட்டியிடம் தங்களை போட்டோ எடுக்குமாறு கூறினர். அப்போது அவரும் இவர்கள் ஐவரையும் போட்டோ எடுத்தார்.
குரங்கு
ஆனால் இரு போட்டோக்களிலும் ஒரு குரங்கு ஒன்று போஸ் கொடுத்துள்ளது. ஒரு போட்டோவில் தனது நடுவிரலை காட்டியபடி உள்ளது. இன்னொரு போட்டோவிலும் கெத்தாக போஸ் கொடுத்துள்ளது.
குரங்குடன் குடும்பத்தினர்
அழகான குடும்ப படம் எடுக்கும் போது குறுக்கே குரங்கு வந்த போதிலும் அக்குடும்பத்தினர் யாரும் பதறாமல் சிரித்தபடியே போஸ் கொடுத்துள்ளனர். இதுகுறித்து ஹிக்ஸ் கூறுகையில் ஒரு வாரமாக நாங்கள் பாலியில் தங்கியிருந்தோம். எங்கள் சுற்றுலாவின் ஒரு பகுதியாக குரங்குகள் காட்டுக்கு சென்றிருந்தோம்.
|
குரங்கு
அப்போது எங்களை போட்டோ எடுக்குமாறு சுற்றுலா வழிகாட்டியிடம் கேட்டுக் கொண்டோம். அப்போது கேமரா முன்பு ஒரு குரங்கு வந்தது. பின்னர் தனது கையில் இருந்த கடலையை குரங்குக்கு வழிகாட்டி கொடுத்தார். இது எங்களுக்கு உற்சாகமான அனுபவமாக இருந்தது என்றார் ஹிக்ஸ்.