For Daily Alerts
Just In
கவிழ்ந்த லாரியில் பெட்ரோல் பிடிக்க முயன்றபோது தீ.. 73 பேர் சாவு.. மொசாம்பிக்கில் பரிதாபம்
மலாவி: மொசாம்பிக் நாட்டில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்து 73 பேர் பலியாகியுள்ளனர். கவிழ்ந்த லாரியிலிருந்து பெட்ரோலை பிடிக்க மக்கள் முண்டியடித்தபோது இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவிலுள்ள குட்டி நாடான மொசாம்பிக்கில் அந்த நாட்டு நேரப்படி, வியாழக்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. அந்த நாட்டின் கேப்பிரிட்ஜேஞ்ச் என்ற கிராமத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கவிழ்ந்து பெட்ரோல் வழிந்தோடியது. அதை பாத்திரங்களில் பிடிக்க நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். அப்போது லாரி வெடித்து சிதறியதில் 73 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனற்.
துறைமுக நகரமான பெய்ராவிலிருந்து மாலாவி நகருக்கு பெட்ரோலை எடுத்துச் சென்றபோது லாரி விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
Comments
English summary
At least 73 people have been killed in a fuel truck explosion in Mozambique, officials say.