ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா- 37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது!
ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தமது பதவியை இன்று ராஜினாமா செய்து இருக்கிறார்
ஜிம்பாப்வே: ஜிம்பாப்வேவில் 37 ஆண்டுகாலம் ஆட்சியில் இருக்கும் அதிபர் ராபர்ட் முகாபே தமது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
1980 வருடம் இருந்து ஜிம்பாப்வேவில் ராபர்ட் முகாபேஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒருவாரத்திற்கு முன் அந்த நாட்டின் ராணுவம் திடீர் என்று நாடாஅளுமன்றத்திற்குள் சென்ற்று அதிபர் ராபர்ட் முகாபேவைஇ கைது செய்தது.
இந்த ராணுவ புரட்சி வெடிப்பதற்கு முக்கிய காரணம் அதிபரின் மனைவிதான் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் அந்த நாட்டின் துணை அதிபர் 'எமர்சன் மனன்காக்வா' அதிரடியாக கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ராபர்ட் முகாபே மனைவி கிரேஸ் துணை அதிபராக நியமிக்கப்பட இருந்தார். இதையடுத்தே ராணுவம் கோபம் அடைந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்தது.
முகாபேவின் ஆட்சியை வெறுத்த மக்கள் ராணுவத்தின் ஆட்சியை விரும்ப தொடங்கி உள்ளனர். அதிபர் ஆட்சியில் அளிக்கப்படாத பல சுதந்திரங்கள் ராணுவ ஆட்சியில் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ராணுவம் வந்த ஒரே வாரத்தில் அங்கு பொருளாதாரம் சீராகி இருக்கிறது. மக்களுக்கு எதிரான சட்டங்கள் பல ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில் நேற்று டிவியில் தோன்றி தன்னுடைய பதவி விலகல் குறித்து முகாபே அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் நான்தான் ஆட்சி செய்வேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அதிபர் முகாபே தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்டு உள்ளார். இதையடுத்து அங்கு அதிகாரப்பூர்வமாக ராணுவ ஆட்சி தொடங்கி உள்ளது. மேலும் அமைச்சரவையும் கலைக்கப்பட்டு இருக்கிறது.