கனடாவின் கியூபெக் நகரில் பழமையான கூரிய ஆயுதத்தால் சரமாரியாக குத்திய மர்ம நபர்- 2 பேர் பலி
கியூபெக்: கனடாவில் கியூபெக் நகரில் பழமையான உடை அணிந்து கொண்டு கூர்மையான ஆயுதத்தால் இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் இருவர் பலியாகிவிட்டனர். இதில் ஏராளமானோர் காயமடைந்துவிட்டார்கள்.
கியூபெக்கின் நாடாளுமன்ற ஹில் பகுதியில் பழங்கால வினோத உடை அணிந்த மர்ம நபர் திடீரென கூரிய ஆயுதம் ஒன்றால் பொதுமக்களை சராமாரியாக குத்தினார். இதில் பலர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு உடனடியாக போலீசார் வருகை தந்தனர். மேலும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மர்ம மனிதர் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதனிடையே மர்ம நபரை போலீசார் கைது செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் கனடாவின் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனை பேர் காயமடைந்தனர், எத்தனை பேருக்கு படுகாயம் ஏற்பட்டது, இந்த தாக்குதலுக்கான காரணம் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.