இந்தோனேசியாவின் அஃசே செல்லும் முஸ்லீம் விமான பணிப்பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும்.. புதிய சட்டம் அமல்
இந்தோனேசியாவின் அஃசே செல்லும் முஸ்லீம் விமான பணிப்பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்து இருக்கிறது.
அஃசே: இந்தோனேசியாவில் உள்ள அஃசே என்ற பகுதி பாதி இந்தோனேசிய கட்டுப்பாட்டிலும், பாதி அந்நாட்டு அரசு கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. இங்கு இஸ்லாமிய ஆட்சி நடந்து வருகிறது.
உலகிலேயே இங்குதான் மிகவும் இறுக்கமாக இஸ்லாமிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த நாட்டிற்கு செல்லும் விமான பணிப்பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அங்கு செல்லும் முஸ்லீம் விமான பணிப்பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்து இருக்கிறது.
கட்டுப்பாடு
இந்த சட்டத்தின் படி விமானம் அந்த பகுதியின் எல்லைக்குள் நுழைந்தவுடன் முஸ்லீம் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிய வேண்டும். முக்கியமாக விமானத்தில் பணிபுரியும் பணிப்பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக வந்த புகாரை அடுத்து இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தண்டனை தர வேண்டும்
இந்த விதியை பின்பற்றவில்லை என்றால் முதல் முறை எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாவது முறையும் பின்பற்றவில்லை என்றால் இஸ்லாமிய சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இதற்காக போலீசை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து அந்நாட்டு அரசு அனைத்து விமான நிறுவனங்களிடமும் பேசி இருக்கிறது,. இன்னும் ஏர் இந்தியாவிடம் பேசவில்லை. மற்ற நாட்டு விமான நிறுவனங்கள் அந்நாட்டின் கோரிக்கைக்கு தலையசைத்து இருக்கிறது.
மற்ற மதம்
அதுபோல் மற்ற மதத்தை சேர்ந்த விமான பணிப்பெண்கள் நல்ல உடை அணிய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அரைகுறை ஆடை அணிய கூடாது கண்ணியமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனங்களிடம் விவாதிக்கப்பட்டுள்ளது.