இது எப்படி இருக்கு.. ஐ.நா விசாரணை அதிகாரி நாட்டிற்குள் நுழைய மியான்மர் தடை
ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரியை தங்கள் நாட்டிற்குள் நுழைய மியான்மர் தடை விதித்துள்ளது.
மியன்மாரில் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் உட்பட, மியான்மரின் மனித உரிமைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக விசாரணை அதிகாரி யாங்ஹீ லீ ஜனவரி மாதம் மியான்மர் செல்ல இருந்தார்.
அவர் தனது பணியைச் செய்யும் போது நடுநிலையாக இல்லாததால் மியான்மருக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.
ரக்கைனில் ஏதோ மோசமான செயல் நடக்கிறது என்பதை தனக்கு தடை விதிக்கப்பட்ட முடிவு காட்டுகிறது என யாங்ஹீ லீ கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று, ரக்கைனில் ஒரு கிராமத்தில் உள்ள புதைகுழியில் 10 உடல் கண்டெடுக்கப்பட்டதாக மியான்மர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் மியான்மருக்கு சென்ற யாங்ஹீ லீ, மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலைகளை எழுப்பியிருந்தார்.
ஆகஸ்ட் 25-ஆம் தேதி அதிகாலை, ராணுவ முகாம் மற்றும் 30 போலீஸ் மீது தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதல், ராணுவத்தின் எதிர் தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது.
அப்போது முதல் 6,50,000 ரோஹிஞ்சா முஸ்லிம்கள், அதாவது மியான்மரில் வாழும் மூன்றில் இரண்டு ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்திற்குத் தப்பி சென்றுள்ளனர்.
தனக்கு தடை விதிக்கப்பட்ட முடிவால் தான் குழப்பமும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக லீ கூறியுள்ளார். குறிப்பாக, அவர் மியான்மருக்கு செல்ல முன்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லீயின் பணி ஒருதலைபட்சமாக இருப்பதாலும், அவர் மீது நம்பிக்கை இல்லாததாலும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்
- "ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக மேலும் பல ஆதாரங்கள் உள்ளன": வெற்றிவேல்
- நாளை தீர்ப்பு வெளியாகும் 2ஜி வழக்கு: கடந்து வந்த பாதை
- ஏமனிலிருந்து ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம்
- வட கொரியாவுடன் இன்னும் தொடர்பில் இருக்கும் நாடுகள் எவை?