பிரான்ஸின் லா ரீயூனியன் தீவில் கரை ஒதுங்கிய பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதா?
பாரீஸ்: பிரான்ஸில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமானம் ஒன்றின் வால் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.370 மாயமானது. பின்னர் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.
விமானத்தை தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஓராண்டுக்கு மேலாக தேடி வருகிறார்கள். இருப்பினும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.

பிரான்ஸ்
பிரான்ஸில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள லா ரீயூனியன் தீவில் புதன்கிழமை விமானத்தின் வால் பகுதி கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. கடற்கரையை சுத்தம் செய்பவர்கள் அதை பார்த்துவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

எம்.ஹெச். 370
லா ரீயூனியனில் கரை ஒதுங்கிய பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த பாகம் பல மாதங்களாக நீருக்கு அடியில் இருந்திருக்கும் என்பதற்கான அடையாளங்கள் அதில் உள்ளன.

விசாரணை
விமான பாகம் குறித்து பிரான்ஸ் நாட்டு விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாயமான விமானம் பற்றிய விசாரணைக்கு தலைமையேற்றுள்ள ஆஸ்திரேலியா போயிங் விமான தயாரிப்பாளர்களை அணுகி கரை ஒதுங்கிய பாகம் எம்.ஹெச். 370 உடையதா என்பதை கண்டுபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

எம்.ஹெச். 17
கடந்த ஆண்டு ஜுலை மாதம் 17ம் தேதி உக்ரைனில் மலேசிய விமானம் எம்.ஹெச். 17 மீது பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் பலியாகினர். இந்நிலையில் இது குறித்து சர்வதேச தீர்ப்பாயம் அமைப்பதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications