For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓமனில் 22 வயது இந்தியப் பெண் மர்ம மரணம்: போலீசார் விசாரணை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஓமன்: அரேபிய வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் 22 வயது இந்தியப் பெண் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவம் அங்கு வாழும் இந்தியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமனின் கோர் ஃபக்கான் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்து உள்ளூர் போலீசாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசர அழைப்பு வந்தது. கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட அடையாளத்துடன் 22 வயது இளம் பெண்ணின் சடலம் ஒன்று தங்களது மருத்துவமனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அந்த இளம் பெண்ணின் சாவின் பிண்ணனியில் உள்ள மர்ம முடிச்சு விடுபடும் என கோர் ஃபக்கான் போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, அந்த பெண்ணின் தந்தையிடம் விசாரணை நடத்தினர்.

'எனது மகள் எதற்காக தூக்கு மாட்டிக் கொண்டாள் என்பது எனக்கு புரியவில்லை. என் வீட்டின் வாசலில் அவள் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துப் போனேன்' என்று அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

English summary
A 22-year-old Indian young woman was died under mysterious circumstances in Oman on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X