ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய, வெளிநாடு தூதரகங்களுக்கு மர்ம பார்சலால் பரபரப்பு
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய, வெளிநாடு தூதரகங்களுக்கு வந்த மர்ம பார்சலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெர்மனி, இத்தாலி, இந்தியா, ஜப்பான், கிரீஸ், எகிப்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, பிரிட்டன், சியாசிஸ்ல், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் மற்றும் கொரியா ஆகிய நாடுகளின் தூதரக அலுவலகங்கள் மெல்போர்னில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய துணை தூதரகத்துக்கு மர்ம பார்சல் வந்தது. இதையடுத்து போலீஸாருக்கு தூதரக அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.
இதுபோல் மற்ற தூதரகங்களுக்கும் இன்று காலை மர்ம பார்சல்கள் வந்தன. பின்னர் அலுவலகத்தை விட்டு அதிகாரிகள் சிதறி ஓடினர். இதையடுத்து தீயணைப்பு துறையினர், அவசர சேவை பிரிவினர் தயாராக இருந்தனர்.
HAZMAT crews have left building. Staff have been allowed back inside the Indian consulate @AAPNewswire pic.twitter.com/2IHf0YPO6f
— Kaitlyn Offer (@KaitlynOffer) January 9, 2019
சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். எனினும் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெராவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு எந்த வித பார்சலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.