மானத்தை விட லேப்டாப் முக்கியம்.. பன்றிகளைத் துரத்திக் கொண்டு நிர்வாணமாக ஓடிய இயற்கை ஆர்வலர் !
ஜெர்மனியில் மடிக்கணினிகளை தூக்கிக்கொண்டு ஓடிய காட்டுப் பன்றிகளை துரத்திக்கொண்டு நிர்வாண கோலத்தில் ஓடிய இயற்கை ஆர்வலரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
பெர்லின்: ஜெர்மனி நாட்டில் மடிக்கணினிகளை தூக்கிக்கொண்டு ஓடிய காட்டுப் பன்றிகளை துரத்திக்கொண்டு நிர்வாண கோலத்தில் ஓடிய இயற்கை ஆர்வலரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் இணையத்தில் வைரலாகியுள்ளன.
ஜெர்மனி நாட்டில் இயற்கை ஆர்வலர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அவர்களில் பலர் 'ஃப்ரீ பாடி கல்ச்சர்' (Free body Culture), எனும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறார்கள். அந்த கொள்கை உடையவர்கள், கோடை காலங்களில் ஆடை ஏதும் அணியாமல் பிறந்தமேனியாக கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் காற்று வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதனை இயற்கைக்கு திரும்புதல் என பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள் அவர்கள்.
அப்படிப்பட்ட கொள்கையுடைய இயற்கை ஆர்வலர் ஒருவர் பெர்லின் நகரில் உள்ள ஒரு பிரபலமான பூங்காவில் நிர்வாணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு காட்டு பன்றியும், அதன் இரு குட்டிகளும், அந்த இயற்கை ஆர்வலரின் மடிக்கணினி பையை நைசாக கவ்விக்கொண்டு ஓடின.
என்னா சந்தோஷம் அந்த குரங்கு முகத்துல.. புரிஞ்ச மாதிரியே பேப்பரை வேற எடுத்து படிச்சு பாக்குதே!
இதைபார்த்து அதிர்ந்து போன அவர், அந்த பன்றிகளை துரத்திக்கொண்டு நிர்வாணக் கோலத்தில் பூங்கா முழுவதும் சுற்றிச் சுற்றி ஓடினார். கடைசியாக பலமாக ஒரு குரல் கொடுத்ததும் அந்த பன்றிகள் மடிக்கணினி பையை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டன.
இந்தக் காட்சிகளை அங்கிருந்த பிரபல ஜெர்மன் நடிகை அடெல் லாண்டர் புகைப்படம் எடுத்து தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துவிட்டார். சம்பந்தப்பட்ட இயற்கை ஆர்வலரின் அனுமதியோடு தான் இந்த புகைப்படங்களை பகிர்ந்ததாக அவர் கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.