மே மாதம் ஏலத்திற்கு வரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாணச் சிலை!
டிரம்பின் நிர்வாணச் சிலை ஏலத்தில் விடப்பட இருக்கிறது.
Recommended Video
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாணச் சிலை வரும் மே மாதம் ஏலத்தில் விடப்படுகிறது.
கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்த சமயத்தில் தனது பிரச்சாரக்கூட்டப் பேச்சுகளால் பெரும் சர்ச்சைகளில் சிக்கினார் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப்.
அப்போது டிரம்ப் அதிபராவதை கடுமையாக எதிர்த்த இண்டிகிளின் என்ற குழுவை சேர்ந்தவர்கள், அவரது நிர்வாணச் சிலையை சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், கிளீவ்லான்ட், சியாட்டில், மற்றும் நியூயார்க் நகரங்களில் உள்ள முக்கிய இடங்களில் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
10 அடி உயரத்தில் கடுமையான முகத் தோற்றம், பெரிய தொப்பை, சிறிய விரல்கள் கொண்ட கைகள் தொப்பையைக் கட்டியவாறு அந்த ஐந்து சிலைகளும் உருவாக்கப்பட்டிருந்தன. வெண்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த சிற்பி ஒருவரால் உருவாக்கப்பட்டவை அந்தச் சிலைகள்.
இதுபற்றிய தகவல் பரவியதும் சிறிது நேரத்தில் அந்தச் சிலைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. அவைகளில் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. அதற்குள் சிலர் அந்தச் சிலைகளுடன் நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிந்தனர். அந்தப் படங்கள் வைரலாகின.
இந்நிலையில், தற்போது டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி வகித்து வரும் நிலையில், மீதமுள்ள அந்த ஒரு நிர்வாணச் சிலையை ஏலத்தில்விட ஜூலியன் ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வருகிற மே மாதம் 2-ந்தேதி நியூஜெர்சியில் உள்ள ஜெர்சி நகரில் இந்த ஏலம் நடைபெற இருக்கிறது.அதில், இந்தச் சிலை ரூ.13 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.