நாம் எல்லாம் ஏலியன்கள் ....நம்மை செவ்வாயில் இருந்து வந்தவர்கள் என்கிறது நாசா!
நமக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், நாம் அங்கிருந்து வந்திருக்கலாம் என்றும் நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது.
நியூயார்க் : நமக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், நாம் அங்கிருந்து வந்திருக்கலாம் என்றும் நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் மனித உயிர் செவ்வாயில் தோன்றியதற்கான தடயங்கள் நிறைய கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ளது. செவ்வாயில் இப்போது உயிர்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்றாலும் ஒருகாலத்தில் கண்டிப்பாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளது.
செவ்வாயில் நிலவிய பலவிதமான கால நிலைகளை வைத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நாசா பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தது.
செவ்வாய் பற்றி அறிக்கை
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்தது குறித்து நாசா அறிக்கை ஒன்றை நேற்று மாலை நியூயார்க்கில் வெளியிட்டது. இந்த அறிக்கையில் செவ்வாய் கிரக உயிர்கள், மனித இனத்தின் தோற்றம் , உயிர் தோன்றியதன் தொடக்கம் என பலவற்றைப் பற்றி விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
மனிதனின் தோற்றம்
இதன்படி மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் தோன்றியிருக்கலாம் , ஒருகாலத்தில் செவ்வாய் கிரகத்திலேயே வாழ்ந்தும் இருக்கலாம் என திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. மேலும் செவ்வாயில் மனித உயிர்கள் தோன்றுவதற்கான அனைத்து சூழ்நிலைகளும் ஒருகாலத்தில் கடசிதமாக நிலவி வந்துள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
உயிர்களின் அடையாளம்
செவ்வாயில் கிடைத்த சில படிமங்களில் உயிர்களின் அடையாளங்கள் கிடைத்துள்ளதாக நாசா கூறுகிறது. இந்த உயிர்கள் அங்கு காணப்பட்ட தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற படி தன்னை தகவமைத்துக் கொண்டு வாழத்தொடங்கியதாக கூறப்பட்டுள்ள்ளது . அங்கு சரியான சீதோசன நிலை ஒருகாலத்தில் நிலவியதாகவும் கூறியுள்ளளது.
அழிந்த ஏலியன்கள்
அதேபோல் " ஒரு வேலை செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் இப்போது இல்லையென்றாலும், ஏதாவது ஒருகாலத்தில் சில உயிர்கள் வாழ்ந்திருக்கலாம். அவைகள் மோசமான கால மாற்றத்தின் காரணமாக இறந்து போயிருக்கலாம்'' என்று கூறியுள்ளனர். 3.7 பில்லியன் வருடங்களுக்கு முன்பு அங்கு உயிர்கள் இருந்ததற்கான சில தடயங்கள் கிடைத்துள்ளது என்றும் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறும் வரலாறு
ஒருவேளை செவ்வாயில் மனிதர்களே வாழவில்லை என்றாலும் இப்போது கிடைத்திருக்கும் தகவல்களை வைத்து மனித இனம் பொதுவாக எப்படித் தோன்றியிருக்கும் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் என கூறியுள்ளது நாசா. நாசாவின் இந்த ஆராய்ச்சி மனித உயிரினம் பற்றிய ஆராய்ச்சியிலும், செவ்வாய் கிரக ஆராய்ச்சியிலும் முக்கியாக திருப்பமாக பார்க்கப்படுகிறது.