நேபாளம்: கம்யூனிஸ்ட்டுகளிடையே மோதல்- பிரதமர் கேபி ஒலி கட்சியில் இருந்து டிஸ்மிஸ்
காத்மண்டு: நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் மோதல் வெடித்துள்ளது. பிரதமர் கேபி ஒலியை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்குவதாக பிரசண்டா அணி தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் அண்மையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் கேபி ஒலி பரிந்துரைத்தார். இதனடிப்படையில் அந்நாட்டு நாடாளுமன்றம் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
ஆனால் கட்சியிடம் ஆலோசிக்காமலேயே நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைத்தார் கேபி ஒலி என்பது பிரசண்டா தலைமையிலான கோஷ்டியின் குற்றச்சாட்டு. இதனையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கேபி ஒலி நீக்கப்பட்டுள்ளதாக பிரசண்டா அணி அறிவித்திருக்கிறது.
டிராக்டர் பேரணி... குடியரசு தின விழாவை சீர்குலைக்க கூடாது- விவசாயிகளுக்கு போலீஸ் நிபந்தனை
இருந்த போதும் தங்களது தரப்புதான் அதிகாரப்பூர்வமானது என கேபி ஒலி அணி கூறி வருகிறது. இதனால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி அணிகளில் எது அதிகாரப்பூர்வமானது என்பதை அந்நாட்டின் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.