For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேப்பா விடுறீங்க? இந்தியாவை சீண்டிய நேபாள பிரதமருக்கு பெரும் அடி.. நாட்டுக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பு

Google Oneindia Tamil News

காத்மாண்டு: இந்தியாவில் இருக்கும் பகுதிகளை தங்கள் நாட்டில் இருக்கும் பகுதிகளாக காட்டி நேபாள அரசு வெளியிட்ட வரைபடத்திற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் தற்போது எந்த அளவிற்கு பிரச்சனை இருக்கிறதோ அதே அளவிற்கு இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தியா நேபாளம் அருகே போட்ட சாலை காரணமாக தற்போது இந்தியாவுடன் நேபாளம் மோத தொடங்கி உள்ளது.

இந்தியா - சீனா- நேபாள் ஆகிய மூன்று நாடுகள் சந்திக்கும் எல்லைதான் லிபு லேக் பகுதி. இங்கு கடந்த மே 8ம் தேதி இந்தியா சாலை அமைத்தது.

ஓய்வு பெறும் அலுவலர்களை எப்படி பிரிவேன்...? திடீரென அழுத அமைச்சர் செங்கோட்டையன்ஓய்வு பெறும் அலுவலர்களை எப்படி பிரிவேன்...? திடீரென அழுத அமைச்சர் செங்கோட்டையன்

ஏன் இந்த சாலை

ஏன் இந்த சாலை

உத்தரகாண்ட் மாநிலம் காத்தியபார்க் பகுதியில் இருந்து லிபு லேக் வரை 80 கிமீ பகுதிக்கு சாலை அமைத்தது. நேபாளம் எல்லையில் இருந்து 5 கிமீ தூரம் வரை இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது. லிபு லேக் பகுதியை நேபாளம் தனக்கு சொந்தமான பகுதி என்று கடந்த சில மாதங்களாக கூறி வருகிறது. லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகள் நேபாளுக்கு சொந்தமானது. இங்கு இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்று நேபாளம் பிரதமர் கேபி சர்மா ஒளி தெரிவித்து வருகிறார்.

வரைபடம் வெளியிட்டது

வரைபடம் வெளியிட்டது

இதற்காக நேபாளம் முறையின்றி வரைபடம் ஒன்றையும் வெளியிட்டது. அதாவது பு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகளை நேபாளம் உள்ளே கொண்டு வந்து வரைபடமாக அந்த நாடு வெளியிட்டது. இந்த பகுதிகள் இந்தியாவிற்குள் இருக்கிறது. ஆனாலும் இந்தியாவை சீண்டும் வகையில் இந்த வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. ஆனால் இது தற்போது அந்நாட்டு பிரதமர் சர்மாவிற்கே எதிராக திரும்பி உள்ளது.

சிக்கல்

சிக்கல்

இந்தியாவில் இருக்கும் பகுதிகளை தங்கள் நாட்டில் இருக்கும் பகுதிகளாக காட்டி நேபாள அரசு வெளியிட்ட வரைபடத்திற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வரைபடத்திற்கான அனுமதி மற்றும் அதற்கான சட்ட திருத்தம் இரண்டின் மீதான விவாதம் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வந்தது. ஆனால் அதன் மீதான வாக்கெடுப்பு நடக்கும் முன்பே அங்கிருந்து உறுப்பினர்கள் பலர் வெளியேறினார்கள்.

அவைக்கு வரவில்லை

அவைக்கு வரவில்லை

அவையில் இருக்கும் எம்பிக்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்கள் வரவில்லை. இதனால் இன்று இதன் மீதான விவாதம் நடத்தப்படவில்லை. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் அவைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த மசோதாவிற்கு அந்நாட்டு எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியின் மற்ற கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் அவர்கள் அவைக்கு வரவில்லை. அப்படியே எல்லோரும் அவைக்கு வந்தாலும் இந்த மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என்கிறார்கள்.

Recommended Video

    எல்லையில் 3 கி.மீ. தொலைவுக்குள் ஊடுருவிய சீன ராணுவம் ? | Oneindia Tamil
    பெரும் அடி

    பெரும் அடி

    இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால் அதற்கு எல்லா கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கும் என்று சர்மா நினைத்தார். ஆனால் இதுவே அவருக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது. முக்கியமாக இந்தியாவின் அழுத்தத்தை பயன்படுத்தி சர்மாவிற்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகிறது. இந்தியாவில் கலகத்தை ஏற்படுத்த முயன்று பிரதமர் சர்மாவிற்கு தற்போது அவர்கள் நாட்டுக்கு உள்ளேயே இதனால் கலகம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Nepal PM sees a huge set back in parliament on the amendment bill on its map against India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X