For Daily Alerts
Just In
நேபாளத்து நிலநடுக்கத்தால் திபெத்தும் கிடுகிடுத்தது...
லாஸா: நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம் மற்றொரு இமயமலை நாடான திபெத்தையும் கிடுகிடுக்க வைத்திருக்கிறது.
நேபாளத்தில் ரிக்டரில் 7.9 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவின் திபெத் பகுதியிலும் உணரப்பட்டது. சீனாவின் நிலநடுக்க அளவுப்படி நேபாளத்தில் 8.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
திபெத் தலைநகர் லாஸா, சிகத்ஸ், கியிராங் உள்ளிட்ட பல இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. சீனா-நேபாள எல்லையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
English summary
The 7.9-magnitude earthquake that struck Nepal on Saturday afternoon was felt in Lhasa and Shigatse City in southwest China's Tibet Autonomous Region, local authorities said.
Story first published: Saturday, April 25, 2015, 17:55 [IST]