புதிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குஷ்வந்த் சிங்கிற்கு உறவினர்.. எப்படி தெரியுமா?
லண்டன்: பிரிட்டனின் புதிய பிரதமரான போாிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். கடந்த 1993-ம் ஆண்டில் அவர் திருமணம் செய்துகொண்ட அவரது மனைவி மெரினா வீலர் அரை இந்தியர் ஆவார்.
பிரிட்டனை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியில் இருப்பவரே, நாட்டின் பிரதமராக பதவி வகிப்பார். அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவருக்கானத் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெராமி ஹன்டை தோற்கடித்தார்.
இந்நிலையில் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள போரிஸ் ஜான்சனின் மனைவியான மெரினா வீலர் மறைந்த ஆசிரியரும் எழுத்தாளருமான குஷ்வந்த் சிங்கிற்கு மருமகள் முறை ஆவார்.
குஷ்வந்த் சிங்கிற்கு போரிஸ் ஜான்சனின் மனைவி உறவினராவதால் அந்த வகையில் நம் நாட்டில் பிரிட்டன் பிரதமருக்கு ஏராளமான உறவினர்கள் உள்ளனர். இதனால் இங்கிலாந்து-இந்தியா இடையேயான உறவை சிறப்பாக மேம்படுத்த பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட உறவை ஜான்சன் ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்திய புலம்பெயர்ந்தோருக்கு ஜான்சன் எழுதிய கடிதத்தில், மோடியுடனான தனது சந்திப்பின் போது, இந்தியாவும் இங்கிலாந்தும் எவ்வாறு நவீன ஜனநாயக நாடுகள் என்பதையும், வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை தாம் வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்
முன்னதாக மோரிஸ் ஜான்சன் தன்னை இந்தியாவின் மருமகன் என்று குறிப்பிட்டு கொண்டார் ஏனெனில் அவரது மனைவியான மெரினாவின் தாய், தீப் சிங், இன்னும் உயிருடன் இருக்கிறார் இவர் குஷ்வந்த் சிங்கின் இளைய சகோதரர் தல்ஜித் சிங்கை மணந்தவர் ஆவார்
தீப் சிங்கின் அக்கா பெயர் அமர்ஜித் சிங்.அவர் திருமணம் செய்துகொண்டது குஷ்வந்த் சிங்கின் அண்ணனான பகவத் சிங்கை. அதே போல பகவத் சிங்கின் சகோதரி மகள் அம்ப்ரீதா சிங்கின் முதல் கணவர் பிரபல இந்தி நடிகர் சாயிஃப் அலிகான்.அவர்களது மகள்தான் பாலிவுட் நட்சத்திரம் சாரா அலிகான்
இவ்வாறு இந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்புடைய போரிஸ் ஜான்சன் தற்போது பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ளது இரு நாடுளுக்கிடையேயான உறவை தனிப்பட்ட முறையில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.