இந்திய பெருங்கடலில் மாயமான விமானத்தை தேடும் பணி: கப்பல், விமானத்தை அனுப்பிய யு.எஸ்.
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை இந்தய பெருங்கடலில் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு கிளம்பிய விமானம் மாயமானது. அந்த விமானத்தில் பயணித்த 239 பேரின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் அவர்களின் குடும்பத்தார் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
விமானம் சீனக் கடலில் மாயமானதால் அங்கு தேடுதல் பணி நடந்தது. இந்நிலையில் விமானம் ரேடாரில் இருந்து மாயமான பிறகு 4 மணிநேரம் விண்ணில் பறந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. இதையடுத்து விமானத்தை இந்திய பெருங்கடலில் தேடுகின்றனர்.
இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில்,
கிடைத்துள்ள புதிய தகவல்களை வைத்து மாயமான விமானத்தை இந்திய பெருங்கடலிலும் தேடலாம் என்றார்.
இந்திய பெருங்கடலில் விமானத்தை தேட அமெரிக்க கடற்படை ஒரு கப்பல் மற்றும் பி-8 பொசைடான் என்ற கண்காணிப்பு விமானத்தை அனுப்பி வைத்துள்ளது.