மசூதிக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்.. லைவ் வீடியோ வெளியிட்டு நடந்த நியூசி. துப்பாக்கி சூடு!
நியூசிலாந்தில் மசூதிக்குள் துப்பாக்கி சூடு நடத்திய நபர் அதை லைவ் வீடியோவாக தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
Recommended Video
வெலிங்டன்: நியூசிலாந்தில் மசூதிக்குள் துப்பாக்கி சூடு நடத்திய நபர் அதை லைவ் வீடியோவாக தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இன்று மிக மோசமான துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருக்கிறது. அங்கு உள்ள மசூதியில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியூசிலாந்தின் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள 2 மசூதிகளில் துப்பாக்கி ஏந்திய சிலர் உள்ளே புகுந்து தாக்கி இருக்கிறார்கள். இதில் 9 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.
நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு.. மயிரிழையில் தப்பித்த வங்கதேச கிரிக்கெட் டீம்.. பரபரப்பு!
இரண்டு மசூதி
துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் அடுத்தடுத்த நிறைய மசூதிகள் இருக்கிறது. அதில் இரண்டு மசூதிகளில்தான் முதற்கட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் உள்ளே 300 பேருக்கும் அதிகமான மக்கள் தொழுகை நடத்திக் கொண்டு இருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீடியோ வெளியிட்டார்
இந்த தாக்குதலை நடத்திய நபர் அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த வீடியோவை லைவாக ஒளிபரப்பி இருக்கிறார். ஆனால் இந்த வீடியோ உடனடியாக இணையத்தில் அனைத்து தளங்களில் இருந்தும் நீக்கப்பட்டது.
என்ன செய்தார்
இந்த வீடியோவில் அந்த நபர் மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது பதிவாகி உள்ளது. மக்களை நோக்கி சரமாரியாக அவர் தாக்குதல் நடத்துகிறார். கண்ணில்படும் மக்களை எல்லாம் சரமாரியாக அவர் தாக்கி, சாகடிப்பது இதில் பதிவாகி உள்ளது.
எத்தனை பேர்
முதலில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது ஒரே ஒரு நபர்தான் என்று கூறப்பட்டது. அதன்பின் தற்போது இதை நடத்தியது ஒருவர் கிடையாது மூன்று பேர் என்று செய்திகள் வருகிறது. இதுவரை இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய நபர்கள் யாரும் பிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.