நியூசிலாந்தில் அக்.17ல் பொதுத்தேர்தல்.. வெல்வாரா ஜெசிந்தா.. களநிலவரம் பகிரும் தமிழர்- வீடியோ
வெலிங்டன்: நியூசிலாந்தில் வரும் அக்டோபர் 17ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து தேர்தலின் களநிலவரம் குறித்து நியூசிலாந்தில் வசிக்கும் தமிழர் ஷார்தார் எம்ஜேஎம் ஒன்இந்தியாவிற்கு விளக்கி உள்ளார்.
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் நியூசிலாந்து வென்று இருக்கிறது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தலைமையில் அங்கு கொரோனா விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் எல்லாம் கொரோனாவிற்கு எதிராக திணறும் நிலையில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் நியூசிலாந்தை கொரோனாவில் இருந்து மீட்டு கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது நியூசிலாந்தில் தற்போது பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. வரும் அக்டோபர் 17ம் தேதி நியூசிலாந்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தற்போது இருக்கும் நாடாளுமன்ற அவை செப்டம்பர் 6ம் தேதி கலைக்கப்பட்ட நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
நியூசிலாந்தில் தற்போது நியூசிலாந்து லேபர் கட்சி, நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சி, நியூசிலாந்து தேசிய கட்சி ஆகிய முன்னணி கட்சிகள் போட்டியிடுகிறது. லேபர் கட்சி சார்பாக ஜெசிந்தா ஆர்டன் போட்டியிடுகிறார். அதேபோல் தேசிய கட்சி சார்பாக ஜூடித் கொலின்ஸ் போட்டியிடுகிறார்.
ரஷ்யா தந்த "சீக்ரெட் விஷம்".. ஐரோப்ப நாடுகளை ஒன்று திரட்டும் ஜெர்மனி.. உருவானது எதிர்பார்க்காத மோதல்
லேபர் மற்றும் தேசிய கட்சிகளுக்கு இடையே நியூசிலாந்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்தில் நிலைமை எப்படி இருக்கிறது, தேர்தலில் யார் வெற்றிபெற வாய்ப்புள்ளது, களநிலவரம் என்ன என்று நியூசிலாந்தில் வசிக்கும் தமிழர் ஷார்தார் எம்ஜேஎம் விளக்கி உள்ளார்.
நியூசிலாந்து தேர்தல் நிலவரம் குறித்து ஷார்தார் எம்ஜேஎம் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் விளக்கி உள்ளார். இந்த வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்!