For Daily Alerts
Just In
நைஜீரியாவில் 100 பேர் சுட்டுக்கொலை… தீவிரவாதிகள் தாக்குதல்
அபுஜா: மத்திய நைஜீரியாவில் உள்ள 3 கிராமங்களுக்குள் அதிரடியாக புகுந்து ஆயுதமேந்திய கும்பல் நடத்திய பயங்கர தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
தானியங்கி துப்பாக்கிகள், வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சுமார் 40 பேர் அங்வான் கதா, சென்ஷியி, அங்வான் சங்வாய் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கினர். வீடுகளையும் தீவைத்து கொளுத்தினர்.
இத்தாக்குதல் 3 கிராமங்களில் அதிகமாக வசிக்கும் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் நடத்தியவர்கள் புலானி என்னும் முஸ்லீம் இனத்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் தகவல் தெரிவிக்கிறது.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கவர்னர் முக்தர் யோரோ, இது குறித்து முழுமயான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Comments
English summary
Gunmen have killed more than 100 people in an attack on three villages in central Nigeria, according to local government officials.