For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனடாவில் பீல் நகர தலைமை போலீஸ் அதிகாரியாக யாழ். துரையப்பா பேரன்

Google Oneindia Tamil News

ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் பீல் நகர தலைமை போலீஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் முன்னாள் மேயர் ஆல்பிரட் துரையப்பாவின் பேரன் நிஷான் என்பது குறிப்பிடத்தக்கது.

1970களில் யாழ்ப்பாணம் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்ற போது நிகழ்ந்த படுகொலைகளுக்கு ஆல்பிரட் துரையப்பா காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இதனால் பிரபாகரன் தலைமையிலான குழு துரையப்பாவை சுட்டுப் படுகொலை செய்தது.

Nishan Duraiappah as Peel’s new Polie chief

இதனைத் தொடர்ந்து துரையப்பாவின் குடும்பம் கனடாவுக்கு சென்றது. தற்போது பீல் நகர தலைமை போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நிஷான் 3-வயதில் கனடாவுக்கு அகதியாக பெற்றோருடன் வந்தார்.

பின்னர் கனடா நாட்டு போலீஸ் துறையில் பணியாற்றினார். தற்போது பீல் நகர தலைமை போலீஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு கீழ் 3,000 போலீசார் பணியாற்றுவார்கள்.

English summary
Peel Regional Police Service Board named Nishan Duraiappah as Peel’s new chief in Canada.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X