பிரான்ஸ் தாக்குதலில் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை- உதவி எண் அறிவிப்பு
பாரீஸ்: பிரான்ஸின் நைஸ் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர் நிலை குறித்து அறிய தொடர்பு எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் நைஸ் நகரில் அந்நாட்டின் பாஸ்டைல் தினத்தை முன்னிட்டு வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. நைஸ் நகரில் இதனை மக்கள் பெரும் கூட்டமாக குவிந்து வேடிக்கை பார்த்து வந்தனர்.
அப்போது வெடிபொருட்கள் நிரம்பிய டிரக்கை ஓட்டி வந்த பயங்கரவாதி வெடிக்கச் செய்தான். இத்தாக்குதலில் 80 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இத்தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பிரான்ஸில் உள்ள இந்தியர்கள் நிலை குறித்து அறிய அங்குள்ள தூதரகத்தில் சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸில் உள்ள இந்தியர்கள் நிலை அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +33-1-40507070.