அணு ஆயுத ஒழிப்பில் முக்கிய பங்கு.. 'ஐகேன்' அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு
பேச்சுவார்த்தை மூலம் 15000 அணு ஆயுதங்களை அகற்றியதில் ஐகேன் பங்காற்றியுள்ளதால், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஓஸ்லோ: 2017ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, அணு ஆயுதத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திவரும், ஐகேன் (ICAN) அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பல பிரிவுகளின்கீழ் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் அணு ஆயுதத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், 'அணு ஆயுதங்கள் ஒழிப்பு பிரசாரம்' என்ற பெயர் கொண்ட ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அப்போது அறிவிக்கப்பட்டது.
நோபல் பரிசு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அணு ஆயுத ஒழிப்பில் ஐகேன் முக்கியிமான அமைப்பாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை மூலம் 15000 அணு ஆயுதங்களை அகற்றியதில் ஐகேன் பங்காற்றியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.