மாஸ்க் அணியாததால் விமானத்துக்குள் கைகலப்பு...பயணிகள் அதிர்ச்சி!!
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் இருக்கும் ஆம்ஸ்டர்டாமில் கேஎல்எம் விமானத்தில் இருவர் மாஸ்க் அணியாததால் விமானத்துக்குள் பெரிய அளவில் கைகலப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் மாறி மாறி அடித்துக் கொண்டதால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வெளியாகி இருக்கும் வீடியோவில் இருவர் அடித்துக் கொள்கின்றனர். அப்போது ஒருவர் எழுந்து அவ்வாறு செய்ய வேண்டாம், நிறுத்துங்கள். விமானத்துக்குள் குழந்தைகள் இருக்கின்றனர் என்று கூறுகிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி இருக்கிறது. சட்டை அணியாத ஒருவர் பார்ப்பதற்கு குத்துச் சண்டை வீரர் போல் இருக்கிறார். இவருக்கும் மற்றொருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படுகிறது. அப்போது அவரை அடித்து கீழே தள்ளுகிறார் மற்றொருவர். சட்டை அணியாமல் இருப்பவர் கீழே விழுகிறார்.
கைகலப்பில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஆல்கஹால் குடித்து இருந்தார் என்றும் கூறப்படுகிறது. பிரிட்டனைச் சேர்ந்தவர் தனது நண்பர்களுடன் இபிசா தீவுக்கு செல்வதற்காக சென்றுள்ளார். இவர்கள் மாஸ்க் அணிய மறுத்ததால், விமானத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதை ஏற்காத காரணத்தினால் கைகலப்பு, மோதல் ஏற்பட்டடுள்ளது.
2 நாள் ரூம் போட்டு.. ஒவ்வொரு ஊரிலும்.. பலமுறை நாசம் பண்ணிட்டான்.. 14 வயசு சிறுமியின் கதறல்!
கேஎல்எம் விமானத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கட்டாயம். இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டு இருந்த அறிக்கையில், மாஸ்க் அணியாவிட்டால் விமானத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்து இருந்தது.
View this post on InstagramA post shared by The Mic High Club (@michighclub) on