பலான படத்தில் நடித்த பள்ளி ஆசிரியை.... கொதித்தெழுந்த பெற்றோர்கள்
பெல்கிரேட்: செர்பியா நாட்டில் நர்சரி பள்ளி ஆசிரியை ஒருவர் தனது ஒய்வு நேரத்தில் ' பலான ' படங்களில் நடித்ததாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
செர்பியா நாட்டின் பெல்கிரேடில் நர்சரி பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவர் பள்ளி முடிந்த பிறகு பகுதி நேர வேலை செய்வதாகக் கூறி , வீட்டிற்கு தினமும் இரவு தாமதமாக வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கணவருக்கும், ஆசிரியைக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
அதே பள்ளியில் படிக்கும் அந்த ஆசிரியையின் குழந்தைகள், தனது தாயின் செயல் குறித்து சக மாணவர்களிடம் தெரிவித்தனர். மாணவர்கள் இதனை அவர்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, வெண்சா என்ற பெயரில் அந்த ஆசிரியையின் புகைப்படங்கள் பிரபல ஆபாச இணையதளத்தில் இருப்பதை பெற்றோர்கள் உறுதிசெய்தனர்.
கோபமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் அந்த ஆசிரியையை பள்ளியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என கூச்சல் போட்டனர்.
இதுகுறித்து ஆசிரியையிடம் பள்ளி முதல்வர் விசாரித்த போது, ' எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, படத்தில் இருப்பவர் வேறு யாரோ என்று கூறியுள்ளார்.
இருப்பினும் இதுகுறித்து ஆசிரியையிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. படத்தில் இருப்பவர் அவர்தான் என்று உறுதி செய்யப்பட்டால், ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி இயக்குனர் தெரிவித்துள்ளார்.