For Quick Alerts
For Daily Alerts
Just In
சீனாவில் பெரும் நிலச்சரிவு.. 100 பேர் உயிரோடு புதைந்தனர்
நிலச்சரிவில் மாயமானோர் பலியாகியிருக்கலாம் என அச்சம்
பீஜிங்: சீனாவில் நிகழ்ந்த ஒரு பயங்கர நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர்.
சீனாவின் தென் மேற்கு மாகாணமான சிச்சுவான், மோக்சியான் பகுதியிலுள்ள ஜின்மோ கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு 40 வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. மலையின் ஒருபக்கம் இடிந்து விழுந்தததால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. கற்கள் அப்பகுதியில் பாயும் நதியின் குறுக்கே சுமார் 2 கி.மீ தூரத்திற்கு படர்ந்து நதியின் போக்கை தடுத்து நிறுத்திவிட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவம் பெரும் மழை காரணமாக நடந்துள்ளது. புல்டோசர்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
Comments
English summary
Over 100 people have been buried alive in a massive landslide in China. The Chinese media reported that at leas at least 40 homes in the village of Xinmo have also been destroyed by the natural disaster in the Maoxian County of China’s Sichuan Province.
Story first published: Saturday, June 24, 2017, 8:32 [IST]