சீனாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்... ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்
பெய்ஜிங்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். சீனா அதிபர் ஜின்பிங்கை இம்ரான்கான் சந்தித்து பேச உள்ளார்.
சீனா அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடியை அக்டோபர் 11-ந் தேதி சந்திக்க உள்ளார். தமிழகத்தின் மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை இரு தலைவர்களும் சந்தித்து பேசுகின்றனர்.
இதற்கான தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சீனாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று சென்றிருக்கிறார். அவரை சீனாவின் அமைச்சர் லுயோ சுகாங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து சீனா அதிபர் ஜின்பிங்கை இம்ரான்கான் சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை சீனா ஏற்கனவே ஆதரித்து வருகிறது.
இந்நிலையில் இம்ரான்கானின் சீனா பயணமானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.