For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக... இந்திய மீனவர்கள் 61 பேரை கைது செய்தது பாகிஸ்தான்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 61 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை சிறையிலிருந்து விடுதலை பெற்ற ஐந்து தமிழக மீனவர்கள் இன்று தங்களது சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இந்த சந்தோஷத்தை முழுவதுமாகக் கொண்டாடுவதற்குள், 61 குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

11 படகுகளில் பாகிஸ்தான் எல்லைக்குள் மீன் பிடித்ததாக இவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனராம். இவர்களது படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை பறிமுதல் செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கராச்சியில் உள்ள டாக் காவல் நிலையத்தில் வைக்கப் பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது வெளிநாட்டவர் மற்றும் மீன் பிடி சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

English summary
Sixty one India fishermen on board 11 boats were arrested by the Pakistan Maritime Security Agency, a media report said on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X