ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது பாக்.
Recommended Video
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி எழுப்பினார். காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக ஷா மெகமூத் குரேஷி புகார் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் இன்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி பேசியதாவது:
ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மை முஸ்லிம்களை வலுக்கட்டாயமான நடவடிக்கைகளால் சிறுபான்மையினராக்குகிறது இந்தியா. காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரானது ருவாண்டாவைப் போல மாற்றப்பட்டு வருகிறது. காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
அத்வானிக்கும்.. முரளி மனோகர் ஜோஷிக்குமா இந்த நிலை.. விதிவிலக்கு தர வழியில்லையா..?
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பயங்கரவாதத்தின் பெயரால் சர்வதேச நாடுகளை திசைதிருப்புகிறது இந்தியா. காஷ்மீர் நிலவரத்தை பன்னாட்டு அமைப்புகள் பார்வையிடுவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்வதேச அமைப்புகள் ஆய்வு நடத்த நாங்களும் ஒப்புக் கொள்கிறோம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலமே சிறைகூடமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு ஷா மெகமூத் குரேஷி பேசினார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பான 115 அறிக்கையை குரேஷி தாக்கல் செய்தார். அதில் காஷ்மீர் குறித்து ராகுல் காந்தி மற்றும் உமர் அப்துல்லா முன்வைத்த விமர்சனங்கள் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.