கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பாக். பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல்!
இஸ்லாமாபாத்: தம்மை சந்தித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரிசோதனைக்கு தாமும் தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் எதி பவுண்டேசனின் தலைவர் ஃபைசல் எதி கடந்த வாரம் இம்ரான்கானை நேரில் சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ1 கோடி நிதி உதவி வழங்கினார் ஃபைசல்.
இச்சந்திப்புக்குப் பின்னர் ஃபைசலுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஃபைசலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புனே டூ பெலகாவி... 5 வயது குழந்தைக்கு உரிய நேரத்தில் மருந்துகளை கொண்டு வந்த ரயில்வே நிர்வாகம்
இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கொரோனா சோதனைக்குட்படுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இம்ரான்கான் கொரோனா பரிசோதனைக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அவரது மருத்துவர் ஃபைசல் சுல்தான் கூறியுள்ளார்.