பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவி காலமானார்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவி லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவி லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
லண்டன்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவி லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
'பனாமா கேட்' ஊழலில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். அவரது மனைவி பேகம் குல்சூம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார்.
2014-ம் ஆண்டிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் அவருடைய உடல்நிலை கடந்த சிலநாட்களாக மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேகம் குல்சூம் 1950 ஆம் ஆண்டு லாகூரில் பிறந்தார். இஸ்லாமியா மற்றும் கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த அவர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1970ஆம் ஆண்டு உருது முதுகலை பட்டம் பெற்றார்.
பாகிஸ்தானின் முதல் குடிமகளாக மூன்று முறை இருந்துள்ள குல்சூமுக்கு ஹசன், ஹுசைன், மரியம், அஸ்மா என்ற 4 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.