அந்த டிராக்டரை அமைதியாக இருக்கச் சொல்லுங்க: பெண் எம்.பி.யை பாக். அமைச்சர் ஆசிப் கிண்டல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெண் எம்.பி.யை பார்த்து டிராக்டர் டிராலி என்று கூறி அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிபுக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் பிடிஐ கட்சி மூத்த தலைவர் ஷிரின் மசாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆசிப் அவையில் இருந்தவர்களை பார்த்து இந்த டிராக்டர் டிராலியை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவர் ஷிரினை பார்த்து, முதலில் நீங்கள் ஆண் குரலில் பேசுவதை நிறுத்திவிட்டு பெண் குரலில் பேசுங்கள் என்று கூறி கிண்டலடித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிடிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து ஷிரின் கூறுகையில்,
நாகரீகமே இல்லாத நபர் அமைச்சராக உள்ளார். ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட அவருக்கு தெரியவில்லை. சரியான வெட்கம் கெட்டவர்.
அதிர்ஷ்டவசமாக என் குரல் அவரின் குரலை விட சப்தமாக உள்ளது என்றார்.