இந்திய ராணுவம் சுட்டதில் 2 பாகிஸ்தானியர்கள் பலியாம்.. இந்திய துணை தூதருக்கு பாக். சம்மன்
பாகிஸ்தானில் உள்ள இந்திய துணை தூதருக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள இந்திய துணை தூதருக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 2 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தது தொடர்பாக சம்மன் அனுப்பியுள்ளது.
எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள சிரிகோட் மற்றும் சத்வால் ஆகிய பகுதிகளில் இந்தியா அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறியுள்ள பாகிஸ்தான் இதுதொடர்பாக அங்குள்ள இந்திய துணைத் தூதர் ஜேபி சிங்குக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 அப்பாவிகள் உயிரிழந்ததாகவும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள பாகிஸ்தான் இந்திய துணைத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.
அப்பாவி பொதுமக்கள் வேண்டமென்றே கொல்லப்பட்டிருந்தால் அது கண்டனத்துக்குரியது என இந்திய துணைத் தூதர் ஜேபி சிங் தெரிவித்தார். மேலும் இது சர்வதேச மனித உரிமை சட்டத்துக்கு எதிரானது என்றும் அவர் கூறயுள்ளார்.