இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம்.. பாகிஸ்தான் பகிரங்க அறிவிப்பு.. முற்றும் மோதல்
இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க போவதாக பாகிஸ்தான் அறிவித்து உள்ளது.
Recommended Video
இஸ்லாமாபாத்: இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க போவதாக பாகிஸ்தான் அறிவித்து உள்ளது. இரண்டு நாட்டு உறவில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்கில் போர் நடந்த போது பாகிஸ்தான் இந்தியா மீது இத்தனை கோபத்தில் இருந்தது கிடையாது. தற்போது காஷ்மீர் பிரச்சனை காரணமாக இந்தியா மீது பாகிஸ்தான் கடும் கோபத்தில் இருக்கிறது.
காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370 சட்டப்பிரிவை இந்தியா நீக்கியது. அதேபோல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக துண்டு போட்டது. இதுதான் பாகிஸ்தான் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இதையடுத்து தற்போது இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க போவதாக பாகிஸ்தான் அறிவித்து உள்ளது. ஏற்கனவே இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை நிறுத்த போவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
வாகா எல்லையை மொத்தமாக மூடுகிறோம்.. இந்தியாவுடன் இனி எந்த உறவும் இல்லை.. பாகிஸ்தான் அறிவிப்பு!
இந்திய சுதந்திர தினத்திற்கு முதல்நாள் பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை காஷ்மீர் போராளிகளுக்கு மரியாதை செலுத்தவும் பயன்படுத்த போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.