For Daily Alerts
Just In
திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபர் கைது
லாகூர்: திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பகாவை நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பஷீர் அகமது என்ற வாலிபர், அதே பகுதியை சேர்ந்த இவர் நதீம் என்பவரின் 19 வயது மகளை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார்.
ஆனால், பஷீரை திருமணம் செய்து கொள்ள அப்பெண் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பஷீர், அப்பெண்ணின் அழகை சிதைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, அப்பெண்ணை கடத்தி அவரது மூக்கை அறுத்து துண்டாக்கியுள்ளார்.
வலியில் துடித்த அப்பெண் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பஷீரை போலீசார் கைதுள்ளனர்.
Comments
English summary
The Pakistani youngster cuts a girl's nose with knife, as she refused to marry him.
Story first published: Sunday, February 16, 2014, 16:55 [IST]