பப்புவா நியூகினியாவில் பெரிய நிலநடுக்கம்.. ரிக்டரில் 7 ஆக பதிவு!
இன்று அதிகாலை பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video
போர்ட் மோர்ஸ்பி: இன்று அதிகாலை பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டரில் 7 ஆக பதிவாகி உள்ளது.
கடந்த வாரம் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
காலை 7 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.0 ஆக பதிவாகி இருக்கிறது. புலோலோ நகரத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்கு ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 127 கிமீ ஆழத்தில் இது ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை. உயிரிழப்பு குறித்தும் இன்னும் தகவல் வெளியாகவில்லை
அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. பப்புவா நியூகினியா கடல்பகுதியில், அதன் ஒட்டிய சாலமன் கடல் பகுதியிலும் மிக அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.