51 ஆய்வுக் கூடங்களில் ஊடுருவிய உயிர்க்கொல்லி ஆந்த்ராக்ஸ்: பெண்டகன் அதிர்ச்சி தகவல்
வாஷிங்டன்: கடந்த 10 வருடங்களில் அமெரிக்காவின் பெண்டகனில் இருந்து ஆந்த்ராக்ஸ் கிருமிகள் மொத்தம் 51 ஆய்வுக்கூடங்களுக்கு போயுள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்க சுற்றுச்சூழலில் நிலவும் நோய் கிருமிகளை கண்டறிந்து தடுக்கும் வகையில் ராணுவ தலைமையகமான பெண்டகனில் பரிசோதனைக்கூடம் இயங்கி வருகிறது. இங்கிருந்து அமெரிக்காவின் பிற ஆய்வுக்கூடங்களுக்கு அடிக்கடி நோய்க்கிருமிகளின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இவ்வாறு அனுப்பப்பட்டதில், உயிர்க்கொல்லி ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவும் தெரியாமல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவிலுள்ள 17 மாகாணங்கள் மற்றும் 3 வெளிநாடுகளிலுள்ள ஆய்வுக் கூடங்களுக்கு இவ்வாறு அறியாத்தனமாக ஆந்த்ராக்ஸ் சென்றுள்ளதாம்.
இதை பெண்டகன் உறுதி செய்துள்ளது. ஆனால், எப்படி இந்த கிருமிகள் வெளியேறின என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. இதில் சதி திட்டம் உள்ளதா அல்லது தெரியாமல் கிருமிகள் போனதா என்பது குறித்து பெண்டகன் ஆய்வு செய்து வருகிறது.