உங்கள் குழந்தைகள் தப்பிக்க முடியாது.. மீண்டும் மிரட்டுகிறான் பெஷாவர் தாக்குதல் ''மூளை'' மன்சூர்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தினர் குழந்தைகள் தப்பிக்க முடியாது என்று மீண்டும் மிரட்டியுள்ளான் பெஷாவர் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட மன்சூர். இந்த மன்சூருக்கு 3 குழந்தைகள் இருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பள்ளிக்கூடம் மீது தாக்குதல் நடத்தி 132 குழந்தைகள் உள்பட 148 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமானவன் உமர் மன்சூர்.
தற்போது பெஷாவர் தாதக்குதல் குறித்து தலிபான் இயக்கம் வெளியிட்ட புதிய வீடியோவில், தங்கள் இயக்கத்தின் தாக்குதலை நியாபடுத்தி இருக்கான் மன்சூர்.
மேலும், நம்முடைய குழந்தைகள், பெண்கள் இறந்து இருந்தால் அது தியாகத்திற்காக; உங்கள் குழந்தைகள் தப்பிக்க முடியாது. எங்களைத் தாக்குபவருடன் நாங்கள் அதே பாணியில் போரிட வேண்டும்.
வஜ்ரிஸ்தான் பகுதியில் அப்பாவி முஸ்லிம்களை கொலை செய்த ராணுவ ஜெனரல்கள், பிரிகேடியர்கள் மற்றும் மேஜர் ஆகியோரின் குழந்தைகள் பெஷாவர் பள்ளிக்கூடத்தில் படிக்கின்றன.
அதனாலேயே பெஷாவர் பள்ளிக்கூடம் மீது நாங்கள் தாக்குதல் நடத்தி படுகொலை செய்தோம் என்றும் கூறியிருக்கிறான் மன்சூர்.
மன்சூர் இஸ்லாமபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்தவன் என்றாலும் மதரசாவில் பயின்றவன். 2007 ஆம் ஆண்டு தலிபான் இயக்கத்தில் சேருவதற்கு முன் கராச்சியில் சகோதரருடன் மன்சூர் கூலி வேலை செய்து உள்ளான்.
இத்தனைக்கும் மன்சூர் 3 குழந்தைகளின் தந்தையும் கூட அவனுக்கு பிடித்த விளையாட்டு வாலிபால்; அவன் சிறந்த வாலிபர் வீரர் என்றும் கூறப்படுகிறது.