நானா சோம்பேறி.. உலகம் பூராவும் மின்னல் வேகத்தில் வைரலாகி வரும் பூனை
அறைக்குள் சிக்கி கொண்ட பெண்ணை பூனை ஒன்று காப்பாற்றி உள்ளது.
வாஷிங்டன்: யார் சொன்னது பூனை ஒரு சோம்பேறி பிராணின்னு.. அமெரிக்காவில் பூனை ஒன்று உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆகி கொண்டிருக்கிறது. அது செய்த நல்ல காரியம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதுதான் இந்த ஸ்பெஷலுக்கு காரணம்.
அமெரிக்காவின் டெக்சாஸ் கேப்ரில்ல என்ற பெண் வசித்துவருகிறார். இவர் ஒரு போகோ என்ற பூனையை செல்லமாக வளர்த்து வருகிறார். அந்த போகோ செம ஸ்மார்ட்.. படு சுட்டி.. ஏதவாது ஒரு சேட்டையை செய்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில், கேப்ரில்லா இருப்பது தெரியாமல் அவரது அக்கா அவரை ரூமிலேயே வைத்து பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டார். இதனால் கேப்ரில்லா ரூமுக்குள்ளேயே சிக்கி கொண்டார். ஆனால் அந்த ரூம் முழுக்க ஜன்னல் கதவுகள் கண்ணாடியிலேயே பொருத்தப்பட்டிருந்தது. இதனால் வெளியில் நின்று கொண்டிருந்த போகோவை சைகை மூலம் கூப்பிட்டதும், ஓடிவந்தது போகோ.
கேப்ரில்லா கதவை திறக்க ஒவ்வொன்றையும் சைகை மூலமே போகோவுக்கு செய்து காட்டி கொண்டிருந்தார். கதவுக்கு வெளிப்பக்கமாக நின்று கொண்டு, ஒன்றுவிடாமல் எல்லா சைகையையும் பூனை செய்து முடித்து, கதவையும் திறந்துவிட்டு ஒரு ஓரமாக போய் கியூட்டாக நின்று கொண்டது போகோ.
இது அத்தனையும் கேப்ரில்லா வீடியோவாக எடுத்து இணையத்தில் போட்டுள்ளார். அதனால்தான் இந்த அறிவாளி பூனையை எல்லோரும் பார்த்து ஆச்சயரிப்பட்டு, லைக்ஸ்குகளை அள்ளி அள்ளி தெளித்து விட்டு போகிறார்கள்.