For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்டோ பைலட்டில் கோளாறு... ஹைதராபாத் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறக்கம்

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு நேரமே சரியில்லை. ஏற்கனவே இரண்டு விமானங்களையும், அதில் பயணம் செய்த 525 பேரை முழுதாக பறி கொடுத்த நிலையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஹைதராபாத்துக்குக் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது.

இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pilot Turns Malaysia Airlines Flight Around After Defect

கோலாலம்பூரிலிருந்து ஹைதராபாத் செல்ல வேண்டிய விமானம் இது. விமானத்தை பத்திரமாக தரையிறக்குவதற்காக, அதில் உள்ள எரிபொருளை முழுமையாக காலி செய்தவற்காக கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் வானில் வட்டமடித்து இந்த விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகலுக்கு மேல் இந்த விமானம் ஹைதராபாத் புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் இரண்டு பெரிய ரக போயிங் விமானங்களை முழுதாக பறி கொடுத்துள்ளது மலேசியன் ஏர்லைன்ஸ். 239 பயணிகளுடன் மார்ச் 8ம் தேதி சென்ற எம்எச் 370 விமானம் அப்படியே மாயமாகி விட்டது. அது என்ன ஆனது என்பது இன்று வரை உறுதியாகத் தெரியவில்லை.

அதேபோல ஜூலை 17ம் தேதி உக்ரைன் மீது பறந்து கொண்டிருந்த எம்எச் 17 விமானத்தை உக்ரைன் போராளிகள் சுட்டு வீழ்த்தினர். இதில் 289 பேர் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.

English summary
A Malaysia Airlines flight was forced to turn around due to an auto-pilot defect, landing safely early Sunday, said the carrier already reeling from the loss of two planes this year. Flight MH198 from Kuala Lumpur to Hyderabad in India departed late Saturday, but the Boeing 737-800 turned back due to an auto-pilot defect. It landed back in Malaysia's capital almost four hours later after circling to burn fuel in the air.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X