ஜெர்மனி பேருந்தில் வெடி விபத்து.. கால்பந்து வீரர் படுகாயம்
பெர்லின்: ஜெர்மனியில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்கள் சென்ற பேருந்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மார்க் பர்ட்ரா என்ற வீரர் படுகாயம் அடைந்தார்.
ஐரோப்பிய யூனியன் கால்பந்து சங்கங்களின் (யுஇஎஃப்ஏ) சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் மொனாக்கோ அணியும், பொரஷியா டார்ட்மன்ட் அணியும் இன்று ஜெர்மனியில் உள்ள வெஸ்ட் ஃபாலன்ஸ்டேடியன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துவதாக இருந்தது.
இதற்காக பொரேஷியா டார்மன்ட் அணி வீரர்கள் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, திடீரென அந்த பேருந்தில் வெடிகுண்டு வெடித்தது. இந்தச்சம்பவத்தில் அந்த அணியைச் சேர்ந்த 26 வயதாகும் மார்க் பார்ட்ரா என்ற கால்பந்து வீரர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மற்ற வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து ஜெர்மனி காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.